வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து 290 கிலோ கேரளக் கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அவதானித்துள்ளனர். இதன்போது குறித்த படகை சோதனையிட்டபோது படகில் 290 கிலோ கேரளக் கஞ்சா அடங்கிய பொதிகள் காணப்பட்டுள்ளன.
இவற்றை மீட்ட கடற்படையினர் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.